
கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாட எதிர்பார்த்துள்ளதாக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் குறிப்பிட்டுள்ளார்.
அடிலைட்டில் நடைபெறும் இந்த போட்டியின் நேற்றைய முதலாம் நாள் ஆட்டநேர முடிவின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
இந்திய அணியுடன் நடைபெறும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 13 ஆயிரம் ஓட்டங்களைக் ரிக்கி பொண்டிங் நேற்றைய தினம் கடந்தார்.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணிசார்பாக ரிக்கி பொண்டிங் தனது 41ஆவது சதத்தினை பூர்த்தி செய்து தொடர்ந்து துடுப்பெடுத்தாடி வருகிறார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 13 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் ரிக்கி பொண்டிங் பெற்றுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கர் முதலாம் இடத்தையும், ராகுல் ட்ராவிட் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.














]
] [



