
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திராசில்வாவிற்கு எதிரான போர்க் குற்றச் சாட்டுக்களிலிருந்து விலக்கு அளிக்க கூடாது என அமெரிக்க மத்திய நீதிமன்றில் சட்டத்தரணிகள் உத்தியோகபூர்வமாக நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
சாவேந்திரா சில்வாவின் இராஜதந்திர பதவியை ரத்து செய்யுமாறு மனிதஉரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்து சாவேந்திராசில்வாவிற்கு எதிராக அமெரிக்க மத்திய நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் போர்க் குற்றவாளி கடயைமாற்றி வருவதாகமனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
நீதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டும் மிகப் பெரிய நிறுவனம் என்றரீதியில் ஐக்கிய நாடுகள் அமைப்பு சாவேந்திராவிற்கு எதிராக விசாரணை நடத்த வேண்டுமெனவலியுறுத்தப்பட்டுள்ளது.
இராஜதந்திர வரப்பிரசாதங்களை பயன்படுத்தி குற்றச் செயல்களுக்கானதண்டனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள அனுமதியளிக்கக் கூடாது என கோரப்பட்டுள்ளது.












]
] [





